கோவை உக்கடம் வாலாங்குளத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம்!!

  -MMH

     கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் குளத்தில் ஒரு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பதாக உக்கடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மீட்கப்பட்டவர் சுமார் 40 லிருந்து 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும். அவர் இறந்து பல நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-மைதீன்.


Comments