திருப்பதியில் இப்படியோர் திருப்பமா! அதிர்ச்சியில் பக்தர்கள்!

 

-MMH

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள மல்கஜ்கிரி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளார். இதையடுத்து உறவினர் ஒருவருடன் திருமலைக்குச்  சென்றுள்ளார். அங்கு கடந்த வெள்ளி அன்று வலுகமாதா ஓய்வு இல்லத்தில் அறை எண் 511ஐ முன்பதிவு செய்து தங்கியுள்ளனர். பின்னர் ஏழுமலையானைத்  தரிசனம் செய்தனர். இதையடுத்து லட்டு பிரசாதம் வாங்கி கொண்டு இரவு தங்கள் அறைக்குத்  திரும்பியுள்ளனர். இந்நிலையில் 24 மணி நேரம் ஆனதால், அறையில் தங்குவதற்கான நேரம் முடிவுக்கு வந்துள்ளது.

இதனைத்  தெரியப்படுத்துவதற்காக ஸ்ரீதரின் அறைக்கு நேற்று தேவஸ்தான அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் கதவைத் தட்டினால் எந்தவொரு பதிலும் வரவில்லை. உடனே திருமலை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு ஸ்ரீதர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே அவரது உடலை மீட்டு எஸ்.வி.ஆர்.ஆர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இந்நிலையில் ஸ்ரீதருடன் உடன் வந்தவர் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திருமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, தரிசன டிக்கெட்கள் மற்றும் இலவச டோக்கன்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், இச்செய்தி தீயாய்ப் பரவ திருமலைக்கு வந்திருந்த பக்தர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். 

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.

Comments