புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவக் கலந்தாய்வு இன்று மீண்டும் தொடக்கம்!

-MMH

கடந்த 23-ம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதனிடையே, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 29-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த நாட்களில் ஏற்கெனவே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் இன்று தொடங்குகிறது. மேலும் மருத்துவ கலந்தாய்வு 10-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments