மீண்டும் தொடரும் கொடூரம்! தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை!!
-MMH
எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் நான்குபேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடியக்கரையில் இருந்து பாண்டியன் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற முத்துலிங்கம், ராஜ், ரஞ்சித், முருகன் ஆகியோர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நால்வரையும் கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பின் கொரோனா பரவல் காலம் காரணமாக மீனவர்களை நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் இன்று மீனவர்கள் விசைப்படகுடன் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை கடற்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
-மைதீன்.
Comments