நாடு முழுவதும் வரும் ஜனவரி 1 முதல் இனி இது கட்டாயம்.! அதிரடியாக அறிவித்த மத்திய அரசு.!
நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும் போது ஃபாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, வாகன உரிமையாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி ஃபாஸ்டேக் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த அட்டை மூலம் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது, கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் நிற்காமல் ஃபாஸ்டேக் அட்டை மூலம் பணம் வசூலிக்கப்பட்டு வாகனங்கள் விரைவாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், வரும் 2021 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து வாகனங்களும் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது ஃபாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்காரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.
Comments