மனைவியுடன் சண்டை போட்ட நபர் கோபத்தை தணிப்பதற்காக 450 கிலோமீட்டர் நடைபயணம்!!
இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் மனைவியுடன் சண்டையிட்டு கோபம் தீரும் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர் அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது மனைவியிடம் சண்டை போட்ட 48 வயது நபர் தனது கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக வீட்டை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்துள்ளார்.
அவரது கோபம் மிக மிக அதிகமாக இருந்தது போல் தெரிகின்றது. ஏனென்றால் அவர் 450 கிலோ மீட்டர் நடந்து சென்றுள்ளார். அந்த அளவுக்கு மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதற்கிடையில் இரவு நேர ஊரடங்கு என்பதால் போலீசாரிடமும் சிக்கியுள்ளார். மேலும் அவர்கள் அந்த இளைஞருக்கு 36 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்தார். இதனிடையே அவரது மனைவி தனது கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-சுரேந்தர்.
Comments