ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு!! - தமிழக அரசாணை ரத்து..!

-MMH 

3 மாநில போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004ஆம் ஆண்டு அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை செய்த அதிரடிப் படையில் இருந்த 752 போலீசாருக்கு இரட்டை பணி மூப்பு தர அரசாணை பிறப்பித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. அதன்படி, அதிரடிப் படையில் இருந்த 752 போலீசாருக்கு இரட்டை பணி மூப்பு கொடுக்கப்பட்டது.

இதில் பல சிக்கல்கள் எழவே, கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அவர்களுக்கு பணி மூப்பு வழங்கப்பட்டு மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணைக்கு எதிராக அதிரடிப் படையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, 2013ஆம் ஆண்டு, அதிரடி படையினருக்கு இரண்டாவது பணி மூப்பு வழங்கும் வகையில், காவல்துறை சர்வீஸ் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு புது அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், 2013ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை தற்போது ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், இரட்டை பதவி உயர்வு என்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும், ஒருமுறை பதவி உயர்வு வழங்கியதே சரி என்றும் நீதிபதி சுட்டிக்காட்டி, அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் பெற்ற இரட்டை பதவி உயர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

-ஸ்டார் வெங்கட்.      

Comments