விலையில்லா ஆடுகள் வினியோகம்!!!

     -MMH

உடுமலை:உடுமலை பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட, 920 பயனாளிகளுக்கு, நகராட்சி சந்தையில், விலையில்லா ஆடுகள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டன.கிராமப்புற பெண்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், கால்நடைத்துறை சார்பில், இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பெரியகோட்டை ஊராட்சியில், 944 பேருக்கு ஆடுகள் வழங்கப்படுகிறது. 

திட்ட பயனாளிகளுக்கு, ஆடுகள் வாங்கித்தர, கால்நடைத்துறையினர் உள்ளடக்கிய, கொள்முதல் குழு அமைக்கப்படுகிறது. அவ்வகையில், பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட, பயனாளிகளுக்கு, உடுமலை நகராட்சி சந்தையில், விலையில்லா திட்டத்துக்கான ஆடுகள் கொள்முதல் செய்யப்பட்டு, 920 பேருக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள, 24 பேருக்கு விரைவில் வழங்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் பேச்சியம்மாள், பாலசுப்ரமணியம் மற்றும் உறுப்பினர்கள், கால்நடைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

நாளையவரலாறு செய்திக்காக,

-முஹம்மதுஹனீப்,திருப்பூர்.

Comments