பாதுகாப்பு இல்லாமல் குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்ட பயணிகள் நிழற்குடை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை, கீழ் பேருந்து நிலையம் அருகில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதிக்குட்பட்ட பயணிகள் நிழற்குடை பாதுகாப்பு இல்லாமல் குடிமகன்கள் என்று அழைக்கப்படும் குடிகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது.
இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தாமல் பயனில்லாமல் இருக்கிறது. இந்த நிழற்குடை பயணிகளின் நலனில் அக்கறை கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.
Comments