சாலைகளில் காணப்படும் குழிகள்..!! - வாகன ஓட்டிகள் அவதி!!

     -MMH

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு உடுமலை சாலையில் காணப்படும் குழிகள்.

வாகன ஓட்டிகள் அதிகம் நிறைந்த பொள்ளாச்சி உடுமலை சாலையில் எப்போதும் போல சாலை விரிசல் குழிகள் காண தொடங்கி விட்டது. வாகன ஓட்டிகள் குழிகள் கண்ணுக்கு தெரியாமல் இருப்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரம படுகின்றனர். சின்னாம்பாளையம் முதல் மின் நகர் வரை சாலை சிறிது சிறிதாக பல்வேறு குழிகள் உள்ளது. 

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட குழி..!!

பொள்ளாச்சி அண்ணா பேருந்து நிலையத்தில் குழி ஏற்பட்டு உள்ளது. பேருந்து நிலையத்தின் உள் சேரும் சாலையின் போட ப்பட்ட தார், பிளவு பட்டு குழி ஆகி உள்ளது. பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே வரும் பொழுது, குழியில் இறங்கி பின்புதான் பேருந்துகள் சிரமப்பட்டு செல்ல முடிகிறது.

பேருந்தில் உள்ள பயணிகள் பயணத்தில் சற்று தூக்கி வீசும் நிலையை உணறுவதாக கூறுகின்றனர். சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments