கோவையில் திடீரென வெளுத்து வாங்கிய கன மழை!!

     -MMH 

கோவை: தமிழகத்தில் பல்வேறு விதமான புயல் சின்னங்கள் உருவாகியதன் காரணமாக கோவையில் பலத்த மழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து பருவமழை பெய்து வந்தது. இந்த நிலையில் பருவமழையை கடந்த சூழ்நிலையிலும் பனிப்பொழிவு கடந்த வருடத்தை காட்டிலும் அதிகமாக காணப்படுகிறது. மொத்தத்தில் கோவை மக்கள் மழையை கடந்து பனிப்பொழிவில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் இன்று காலை கடுமையான பனிப்பொழிவு இருந்தது. நடைபாதை வியாபாரிகள் காலையில் நடைபயிற்சி செல்லக்கூடியவர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல கூடியவர்கள் அனைவரும் ஸ்வெட்டர் அணிந்து சென்றனர். இன்று அதிகாலையில் இருந்தே மேகமூட்டம் ஆகவும் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. மக்கள் அனைவரும் இது பனிப்பொழிவின் தாக்கம் என நினைத்தனர். திடீரென காலை 8 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து அவை கன மழையாக மாறியது. வியாபாரிகள் தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஆங்காங்கே தட்டுத்தடுமாறி மழையில் சிக்கி நனைந்தபடி சென்றனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

கோவை காந்திபுரம், டெஸ்டூல் பாலம், 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், சித்தாபுதூர், பீலமேடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம், அவிநாசி ரோடு நஞ்சப்பா ரோடு, சிங்காநல்லூர் பேருந்து நிலையம், என கோவை மாநகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. திடீர் கனமழையால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

-சீனி,போத்தனூர்.

Comments