ஹீட்டரை தொட்டு அலறிய சசிகலா... ஓடிவந்து உதவ முயன்ற கணவர்.. சென்னையில் பெரும் சோகம்😔😔!!

 

     -MMH

தண்ணீர் காயவைக்க பலரும் இன்றைக்கு ஹீட்டரைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஈர கையுடன் ஹீட்டரை தொட்டால் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

அப்படித்தான் சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் ஹீட்டர் போட்ட போது ஏற்பட்ட விபத்தால் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அயப்பாக்கம்:

சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் மருதம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் விஜயகுமார்-சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களது வீட்டில் தண்ணீர் காயவைக்க மனைவி சசிகலா வாட்டர் ஹீட்டர் தண்ணீர் நிரப்பிய வாலியில் போட்டுள்ளார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து சசிகலா ஹீட்டரை நிறுத்த சென்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

சசிகலாவின் அபாய குரல் கேட்டு அவரை காப்பாற்ற சென்ற கணவர் விஜயகுமார் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சசிகலா, விஜயக்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருமுல்லைவாயில் காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ருக்மாங்கதன்,சென்னை.

Comments