விவசாயிகள் போராட்டத்தில் கொங்குத் தமிழில் தெறிக்கவிட்ட பஞ்சாப் விவசாயி!
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநில விவசாயி ஒருவர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழில் விளக்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், ஐந்தாம் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் டெல்லியின் பல்வேறு எல்லைகளிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சார்பில் வருகிற 8ஆம் தேதி முழு அடைப்புக்கு போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதனைத்தொடர்ந்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகிற 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு உறுதியளித்தாலும், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும்வரை போராட்டத்தை தொடர்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், திரை, விளையாட்டு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு!இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநில விவசாயி 'கோல்டன்' என்பவர், தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழ் மொழியில் விளக்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரையில் பிறந்து வளர்ந்ததாகக் கூறும் விவசாயி கோல்டன்,
(இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்னு தெரியில போல நம்ம P.Mக்கு)-பாரூக், சிவகங்கை.
Comments