ரஜினி கட்சி துவங்காததற்கு இந்த 2 பிரபலங்கள்'தான் காரணமா..?

 

-MMH

அரசியல் வேண்டாம் என்று ரஜினி முடிவு செய்ய பிரபல தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவியும், மோகன் பாபுவும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதம் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்று ரஜினிகாந்த் கடந்த மாதம் அறிவித்தார். அதன் பிறகு அவர் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றார். அங்கு அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு சென்னை திரும்பினார். அதன் பிறகு 'நான் கட்சி துவங்கவில்லை, மன்னித்துவிடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார். 'உடல்நலன் காரணமாக அவர் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதால் மனதை மாற்றிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது' என்று ரஜினியின் அண்ணன் சத்யநாராணா தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினி மனம் மாற நடிகர்கள் சிரஞ்சீவியும், மோகன் பாபுவும்தான் காரணம் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஜினி அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்தபோது அவரை சிரஞ்சீவியும், மோகன் பாபுவும் சந்தித்து பேசினார்களாம்.

?

சிரஞ்சீவி கட்சி துவங்கி அரசியலில் சில ஆண்டுகள் இருந்துவிட்டு இனி அந்த சகவாசமே வேண்டாம் என்று மீண்டும் நடிக்க வந்துவிட்டார். அவர், தான் கட்சி துவங்கி பட்ட கஷ்டங்களை எல்லாம் ரஜினியிடம் எடுத்துக் கூறி, உங்களுக்கு அரசியல் வேண்டாம் என்றாராம். 'சினிமாவை போன்று இல்லை அரசியல். அங்கு வெற்றி பெறவில்லை என்றால் மோசமாக பேசுவார்கள்.

சினிமாவை போன்று அரசியலில் மரியாதை இருக்காது. ரசிகர்கள், பிரபலங்கள் கொண்டாடும் நீங்கள் போய் அரசியலில் குதித்து பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். கட்சி துவங்கினால் ஸ்ட்ரெஸ் அதிகம், டென்ஷனுக்கு சொல்லவே வேண்டாம். உங்கள் உடல்நலம் இருக்கும் நிலையில் அரசியல் உங்களுக்கு ஒத்தே வராது, இந்த விபரீத முடிவை கைவிடுங்கள்' என்றார்களாம்.

கட்சி துவங்குகிறேன் என்று அறிவித்துவிட்டேனே, இப்போ போய் பின் வாங்கினால் நன்றாக இருக்காது என்றாராம் ரஜினி. அதன் பிறகு உடல்நலம் பாதிக்கப்படவே நண்பர்கள் சிரஞ்சீவி, மோகன்பாபு சொன்னதை செய்துவிட்டார் என்று தெலுங்கு ஊடகங்கள் கூறுகின்றன.

-நாளைய வரலாறு செய்திகளுக்காக,

 -பாரூக்.

Comments