பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் கைது!

 

-MMH

     சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே உள்ளது. திருப்பூரில் பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதி பாஜகவை சேர்ந்தவர் ராஜ். இவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தையல் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் அதே பகுதியில் உள்ள 12 ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது மாணவியை விடுமுறையில் பணிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கி உள்ளார்.

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments