5, 10, 100 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் - ரிசர்வ் வங்கி!!

 

-MMH

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது பற்றி மக்கள் அஞ்ச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மங்களூருவில் மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் மகேஷ் பங்கேற்றார். அப்போது அவர், பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும்” எனத் தெரிவித்தார். மேலும் “பணமதிப்பிழப்புக்குப் பிறகு 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஊதா நிற ரூ.100 நோட்டுகளைத் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.

ரூ.10 நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகும், வர்த்தகர்கள் மற்றும் வணிகஸ்தர்கள் அந்த நாணயங்களை ஏற்கவில்லை, இது வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் பழைய 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மட்டுமே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் இவை செல்லாது என்று அர்த்தமில்லை. புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுகள் செல்லும். இவற்றைத் திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி, அவற்றுக்குப் பதிலாக அதிக அளவில் புதிய ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடும். ஆகவே ரிசர்வ் வங்கி அறிவிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன் சென்னை.

Comments