மக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மாற்ற வேண்டும்!! - தேமுதிக சார்பில் மனு!!

    -MMH

     கோவை மாவட்டத்தில் மக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தேமுதிக சார்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.PK தினகரன் அவர்கள் தலைமையில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கோவையில் மக்களுக்கு இடையூராக உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. கிணத்துக்கடவு ஒன்றிய பணபட்டி ஊராட்சியில் ஊருக்கு மத்தியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிற டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும்  என இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆட்சியரிடம் மனு அளித்தும்,எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தது போல டாஸ்மாக் இல்லாத தமிழ்நாடு வேண்டும் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் அது வரையில் மக்களுக்கு இடையூறாகவும், மக்கள் வாழும் பகுதிகளில் நடுவில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு K தினகரன் கூறுகையில், "கிணத்துக்கடவு ஒன்றியம் பணப்பட்டி ஊராட்சியில் ஊருக்கு மத்தியில் இருந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆட்சித் தலைவரிடம் மனு அளித்திருந்தேன் அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார் ஆனால் இன்று வரை அந்த டாஸ்மாக் கடை மக்கள் வாழும் பகுதிக்கு நடுவிலேயே செயல்பட்டு வருகிறது. அதே போல கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக இருக்கின்ற டாஸ்மாக்  கடைகளை உடனடியாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டும். அப்படி அரசு நடவடிக்கை இல்லை என்றால் ஜனநாயக முறைப்படி தேமுதிகவின் சார்பில் அந்த மது கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். தேவைப்பட்டால் அண்ணியார் அவர்களை கோவைக்கு அழைத்து அவர் தலைமையில் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்" என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்வில் பொ௫லாளர் மு௫கேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சதாச்சிவம்,கிட்டு,மகாலிங்கம், இளைஞர் அணி செயலாளர் இந்துராஜ்,துணை செயலாளர் தவசி தனபால்,மதுக்கரை ஒன்றிய செயலாளர் போடிபாளையம் ஆறுச்சாமி,சூலூர் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார்,கேப்டன் மன்ற செயலாளர் இஸ்லாமில், கிணத்துக்கடவு பே௫ராட்சி செயலாளர் ஆனந்தன், குறிச்சி பகுதி பூங்காவனம், ரமனாஜோசப் மற்றும் பாண்டி,கோபால்,சரவணன், கார்த்திக்,அப்பாஸ், ஆறுமுகம், ராதகி௫ஷ்னன் உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் கலந்துகொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments