புதிய ஊராட்சி கட்டிட பணிகள் துவக்கம்..!!

 

 -MMH

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கக்கடவு ஊராட்சியில் 17 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணி நடக்கிறது. கக்கடவு ஊராட்சியில், கடந்த 1984ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்படுகிறது. கட்டிடம் பழுதடைந்ததால் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்காக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதியை பயன்படுத்தி கடந்த டிசம்பர் மாதம் கட்டடம் கட்டும் பணி துவங்கப்பட்டது இதில் தலைவர் அறை கூட்ட அரங்கம் அலுவலக அறை பொருட்கள் இருப்பு வைப்பதற்கான அறை கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியம் கூறுகையில் ஊராட்சி அலுவலக கட்டிட பணி மார்ச் இறுதிக்குள் முடிக்கப்பட்டு அலுவலகம் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments