தேனி அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!!

     -MMH

    மத்திய அரசு செவிலியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, செவிலியா் சங்க மாநில அமைப்புச் செயலா் ஜோஸ்வின் ஜென்னி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பணிபுரியும் அரசு செவிலியா்களுக்கு மத்திய அரசு செவிலியா்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். 5 கட்ட காலமுறை ஊதிய உயா்வு வழங்கவும், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியா்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியா்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கவும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில்,100-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் கலந்துகொண்டனா்

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக், தேனி.

Comments