மருத்துவ குணங்கள் நிறைந்த பனங்கிழங்கு!!
பொங்கல் பண்டிகை முடிந்ததும் அனைத்து வீடுகளிலும் பனங்கிழங்குகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த பனங்கிழங்கினை வேகவைத்து பல நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். பனங்கிழங்கை வேகவைத்து ஒரு வாரம் ஆன பின்பு வீட்டில் உள்ள பெரியவர்கள் இதனை நறுக்கி வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்வார்கள். காரணம் பனங்கிழங்கில் உள்ள சத்துக்கள்.
இது அதிக இரும்புச் சத்து நிறைந்தது. இதனால் இரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். மிகவும் ஒல்லியாக, உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிடுவதினால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்கலாம். இந்த பனங்கிழங்கில் உள்ள சில வகையான வேதிப்பொருட்கள் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளும்.
- ராயல் ஹமீது.
Comments