கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள பழமையான சி.எஸ்.ஐ. ஆன்மாக்கள் ஆலயத்தின் 150 வது ஆண்டு விழா!!

 

-MMH

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள பழமையான சி.எஸ்.ஐ.சகல ஆன்மாக்கள் ஆலயத்தின் 150 வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் தபால் தலை வெளியிட உள்ளதாக ஆலயத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கடந்த 1872ம் ஆண்டு   அமைக்கப்பட்ட சிஎஸ்ஐ சகல ஆன்மாக்கள் ஆலயம் கோவையின் அடையாளமாக உள்ளதோடு பழமையான அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.இந்நிலையில் ஆலயத்தின்  150-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் முன்னதாக 150 வது ஆண்டு லோகோ வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில்,  150 வண்ண  பலூன்கள் மற்றும் புறாக்கள் பறக்க விடப்பட்டன.

 தொடர்ந்து 150 வேப்ப மரக் கன்றுகள் திருமண்டல சுற்றுச்சூழல் குழுவிற்கு வழங்கப்பட்டது.  விழா குறித்து தேவாலயத்தின் தலைவர் அருட்திரு சார்லஸ் சாம்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்: ஆலயத்தின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும்,. மே 1ஆம் தேதி  பல்வேறு துறை சார்ந்த 150  தொழிலாளர்கள் கௌரவிக்க பட உள்ளதாக தெரிவித்தார். . இதனை தொடர்ந்து  அன்னையர் தினம்,, தந்தையர் தினம் கொண்டாட உள்ளதாகவும்,மேலும் .150 கார்கள் பங்கேற்கும் சிறப்பு கார் ரேலி,   வாக்கத்தான் போட்டியும்,  பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகள் என ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடுவதோடு, உள்ளதாக தெரிவித்தார்.இறுதி நாளான 26 ஜனவரி 2022 சிறப்பு தபால் தலை வெளியீடு செய்யப்பட உள்ளது என்று கூறினார்.

- சீனி,போத்தனூர்.

Comments