சூலூரில் விமானப் படை விமானங்களின் சாகச நிகழ்ச்சி..!!

 

-MMH

     விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் தரையிறங்கும் வீரா்கள். சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விமானங்கள். கோவை மாவட்டம், சூலூரில் விமானப் படை விமானங்களின் சாகச நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வங்கதேச விடுதலைக்காக 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. இந்தப் போரின் வெற்றியில் இந்திய விமானப் படைக்குப் பெரும் பங்கு உள்ளது. இந்நிலையில், இந்த வெற்றியின் பொன் விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமான சாகச நிகழ்ச்சிகளில் (ஏா் ஃபெஸ்ட் 2021) விமானப் படை ஈடுபட்டுள்ளது.

கோவை, சூலூரில் உள்ள விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இலகு ரக விமானமான தேஜஸ், போக்குவரத்துக்கான ஹெலிகாப்டா்களான ஏ.என். 32, எம்.ஐ. 17 வி 5 ஆகியவற்றின் சாகசங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சூா்யகிரண் விமான சாகசக் குழுவினரின் விமான சாகசம், சாரங் குழுவினரின் ஹெலிகாப்டா் சாகசங்களும் நடைபெற்றன.இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விமானப் படையினரின் சாகசங்களைக் கண்டு ரசித்தனா். இதையொட்டி விமானப் படை விமானங்கள், ஆயுதங்களின் கண்காட்சி நடைபெற்றது. விமானப் படை தொடா்பான மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனா்.

-கிரி.

Comments