தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் நடத்தும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோவையில் துவங்கியது!!

-MMH

     தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் நடத்தும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் சார்பில் 16வது மாநில பாரா ஒலிம்பிக் தடகள மற்றும் 6வது இளையோர் நீச்சல் போட்டிகள் இன்று கோவையில் துவங்கியது. கோவை நேரு விளையாட்டு அரங்கில் இப்போட்டியின் துவக்கமாக 80க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் பேரணி நடத்தினர்.

இதனை விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவையில் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 1200க்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழகம் முழுவதும் இருந்து பங்கேற்கின்றனர். 

தடகள போட்டிகள் நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நீச்சல்  போட்டிகள் மாநகராட்சி நீச்சல் குளங்களிலும் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறுவோர் சென்னையில் நடக்க உள்ள தேசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 

-சீனி,போத்தனூர்.

Comments