ஈஷாவில் தொடங்கிய யக்ஷா திருவிழா!

-MMH

      கோவை பேரூர் ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரியையொட்டி,  'யக்ஷா' திருவிழா, நேற்று துவங்கியது .கோவை ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரிக்கு முந்தைய, மூன்று நாட்கள் 'யக் ஷா' எனும், கலைத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு விழா, நேற்று துவங்கி, நாளை வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று, ஹிந்துஸ்தானி பாடகி கவுசிகி சக்ரவர்த்தியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments