தைராய்டு பிரச்சனைகளை போக்கும் மருத்துவ குறிப்புகள்...!

      -MMH
      சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இயற்கை மருத்துவ முறைகளில் இதுவரை வந்த நோய்கள் வர போகின்ற நோய்கள் அனைத்திற்குமே தீர்வு இருக்கிறது.

தைராய்ட் மூலம் உடல் எடை அதிகரித்தல், குறைதல், ரத்த போக்கு, உடல் வலி. மற்றும் மலசிக்கல் வரை பல வியாதிகள் வரும். துதுவளை சாரை தினமும் காலையில் குடிப்பதும், மந்தாரை மலர் மொட்டும் சிறந்த தீர்வு.

மந்தாரை என்றால் என்ன? வாழை இலைக்கு மாற்றாக தையல் இலை என்று ஒன்று வைப்பார்களே அதுதான். தெய்த்த மந்தாரை இலையை தான் சாப்பிட முடியாது.

மந்தாரை இலையில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள், ஆல்கலாய்டுகள், ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின் போன்ற உடலுக்கு நன்மை விளைவிக்கும் பல வேதி பொருட்கள் உள்ளன. இதன் வேர் முதல் மலர், இலை, பட்டை என ஒவ்வொன்றும் பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.

இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொட்டுகளை சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு  ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் தைராய்ட் மட்டும் அல்லாமல் அல்சர், ரத்த போக்கு போன்ற பல நோய்களை குணப்படுத்தும். இன்றைய காலத்தில் தைராய்டு பிரச்சினை மிகவும் ஆண்களையும் பெண்களையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. அதைத் தீர்ப்பதற்கு இந்த வழிகளைக் கையாளவும், நோயிலிருந்து நம்மை பாதுகாக்கலாம். 

- கிரி, தலைமை நிருபர் .

Comments