ஓடினால் கார்! நின்றால் பார்! குடும்பத்தோடு குடிக்கும் பெண்கள் வீடியோ!

 

-MMH

      



காருக்குள் அமர்ந்தபடி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் விடுமுறை நாளை கொண்டாடி மகிழ காரில் புறப்பட்ட பெண்கள் மது குடித்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மது குடிக்கக்கூடாதென்று எந்த விதிமுறையும் இந்தியாவில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், மதுவால் இளைஞர்களும், பல குடும்பங்களும் சீரழிந்து வரும் நிலையில் என்றாவது பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்ற நம்பிக்கையில் பலர் உள்ளனர். இந்நிலையில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று சில பெண்கள் மதுவை நோக்கி செல்கின்றனர். அதன் உச்சகட்டமாக ஆந்திர மாநிலத்தில் விடுமுறையை கழிக்க காரில் சென்ற பெண்கள் குழு ஒன்று ஓரிடத்தில் காரை நிறுத்தி, அசைவத்துடன் மது குடிக்கிறது.

அப்போது, காருக்கு வெளியே அதே குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் சிலர் இருப்பதையும் பார்க்கமுடிகிறது. உற்சாகத்தில் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேயேற்ற, அது ஆந்திரா முழவதும் பரவியது.

குடிபோதையில் கும்மாளம் அடித்த அந்த பெண்கள் ஆந்திராவில் எங்கிருக்கிறார்கள் என்று போலீசும் தேட ஆரம்பித்துவிட்டது. இத்தனை பேரும் மது அருந்துவதால் காரை ஓட்டிக்கொண்டு வந்தது யார்? போதையில் காரை ஓட்டிக்கொண்டு சென்றார்களா? என்று ஆந்திர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

-ராயல் ஹமீது.

Comments