பொள்ளாச்சியில் ராசாவை கண்டித்து அ.தி.மு.க.ஆர்ப்பாட்டம்..!!

     -MMH

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், தி.மு.க., எம்.பி., ராசாவை கண்டித்து அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தி.மு.க., எம்.பி., ராசா, தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் குறித்து தரக்குறைவாக பேசியதை கண்டித்து, பொள்ளாச்சி நகர அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், திருவள்ளுவர் திடலில் நேற்று நடந்தது. 


நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.தி.மு.க., எம்.பி., ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முதல்வர் குறித்து தரக்குறைவாக பேசிய ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அ.தி.மு.க.,வினர் கூறுகையில், 'தி.மு.க.,வினர் தோல்வி பயத்தில் இழிவான செயல்களை செய்கின்றனர். தி.மு.க., எம்.பி., ராசா இழிவாக பேசியதை கண்டிக்கிறோம். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்,' என்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments