9 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை!!

     -MMH

 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மகாராணி அவென்யூ பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திண்டுக்கலில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக ஆனந்தன் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த ஆனந்தன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உடனடியாக வடவள்ளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 9 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

-சோலை ஜெய்க்குமார், Ln.இந்திராதேவி முருகேசன்.

Comments