ஞாயிறு முழு ஊரடங்கு .. தமிழக அரசு கட்டுப்பாடு முழு விபரம்!!

     -MMH

     கோவை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் , தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது . கொரோனா நோய் பரவல் நிலை , தற்போது அதிகரித்து வரும் நிலையிலும் , வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் , அண்டை மற்றும் இதர வெளி மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையிலும் , கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டும் , கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக , தேசியபேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன் , சில புதிய கட்டுப்பாடுகளுடன் , 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் , பொது இடங்களில் , பொது நிகழ்ச்சிகள் , விழாக்கள் , கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதாலும் , பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறுவதாலும் , சமீபகாலத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது . குறிப்பாக 13,070 நபர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , 17.4.2021 அன்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 65,635 ஆக உயர்ந்துள்ளது . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.4.2021 அன்று தலைமைச் செயலர் , அரசு ஆலோசகர் , அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் , பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி , கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்கள் . மேலும் , தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக நிலவும் சூழ்நிலையினை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு , நிலைமையினை தொடர்ந்து கண்காணித்து , நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளும் வழங்கி வருகிறது . கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு , அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு , ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது . இருப்பினும் , பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும் , சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும் , நாளுக்கு 2 நாள் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் , மாண்புமிகு முதலமைச்சர் இன்று ( 18.4.2021 ) தனது முகாம் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள் . பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு , ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன் , கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கும் 20.4.2021 அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது : இரவு நேர ஊரடங்கு : மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் , இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் . இரவு நேர ஊரடங்கின் போது , தனியார் / பொது பேருந்து போக்குவரத்து , வாடகை ஆட்டோ , டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது . US O தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால் , வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் ( இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை ) செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது . மாநிலங்களுக்கு இடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகளின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல் , உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல் , கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் . 3 எனினும் , அவசர மருத்துவத் தேவைகளுக்கும் , விமானநிலையம் / இரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ , டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும் . மேலும் , அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம் , தினசரி பத்திரிக்கை விநியோகம் , மருத்துவமனைகள் , மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் , மருந்தகங்கள் , ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் , சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் ( petrol , diesel ) & LPG ) இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும் . . ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம் . • பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் ( Petrol / Diesel Bunks ) தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் . தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் ( continuous process industries ) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக் கிறது . மேலும் , இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும் , தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும் ,தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின் , வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது . ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு : மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் . அன்றைய தினம் இறைச்சி கடைகள் , மீன் மார்கெட் , காய்கறி கடைகள் , சினிமா தியேட்டர்கள் , வணிக வளாகங்கள் , மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது . இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . . எனினும் , அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம் , தினசரி பத்திரிகை விநியோகம் , மருத்துவமனைகள் , மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் , மருந்தகங்கள் , ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் , போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் , அனைத்து சரக்கு வாகனங்கள் , விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் , எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ( petrol , diesel & LPG , etc. ) ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும் . 5முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் , உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் , நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும் , மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது . Swiggy , Zomato போன்ற மின் வணிகம் ( e – commerce ) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது. மற்ற மின் வணிக ( e – commerce ) நிறுவனங்களின் வேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை . ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம் . • தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் ( continuous process industries ) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது . • முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் , திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் ( கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல் ) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு ( கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு 6மிகாமல் ) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை . பொது : . நீலகிரி மாவட்டம் , கொடைக்கானல் , ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு , உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது . தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் , அனைத்து நாட்களிலும் , பொதுமக்களுக்கு அனுமதி இல்லை . • பூங்காக்கள் , உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் , அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை . • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ( work from home ) அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி , தேநீர் கடைகள் , உணவு விடுதிகள் , காய்கறி கடைகள் , பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும் , வணிக வளாகங்கள் ( shopping malls ) , சமய அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ( நகை , ஜவுளி ) ( Big format stores ) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் , இரவு 9.00 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு , மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே குடமுழுக்கு / திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் / இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ , கோயில் பணியாளர்கள் , கோயில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு , உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது . • கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு , புதிதாக குடமுழுக்கு / திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள் , தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் . அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது . மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது . இருப்பினும் , +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு ( Practicals ) மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் . • +2 8கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக ( online ) வகுப்புகளை எடுக்க வேண்டும் . • அரசு மற்றும் தனியார் கல்லூரி பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக ( online ) மட்டுமே நடத்தப்பட வேண்டும் . கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் , அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் , இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது . கோடை கால முகாம்கள் ( summer camps ) நடத்த தடை விதிக்கப்படுகிறது . . தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன் , விருப்பப்படும் தங்கும் விடுதிகள் ( Hotels ) இணைந்து கோவிட் பாதுகாப்பு மையங்களாக ( Covid Care Centre ) ) செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது . இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து , தேவைப்படும் அனுமதியை வழங்கலாம் . இத்தங்கும் விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக்கூடாது . திருமண . நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி , நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , கொரோனா கொள்ள தடுப்பு 9கைகளை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது , சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு சுத்தம் செய்வது , சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற திருமண மண்டப நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் . தவறும் பட்சத்தில் , மண்டப உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . கைகளை • நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி , திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் , கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது , சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு சுத்தம் செய்வது , சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை திரையரங்க நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் . தவறும் பட்சத்தில் , திரையரங்க உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . • நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி , உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் , கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது , சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது , சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை உணவக / தேநீர் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் . • கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் . கொரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக கடை வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , நோய்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்கவும் , நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஓரிரு நாட்களில் கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டு , அந்தந்த பகுதிகளிலேயே கட்டுப்படுத்தி , நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விடவும் உரிய அறிவுரைகளை வழங்கினார்கள் . மருத்துவமனைகளில் பிராண வாயு ( oxygen ) இருப்பை போதுமான அளவு வைக்க , கூடுதலாக தமிழ்நாட்டிலேயே அதன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதனை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொழிற்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது . அரசு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் , மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் , நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் . பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும் , பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் , பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும் . பொதுமக்கள் வீட்டிலும் , பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும் , வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும் , சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து , அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து , அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி , இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும் . மேலும் , நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் , பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும் . பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டுமென தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது . ** வெளியீடு : இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை

நாளையவரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments