மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டு!! போலீஸைப் பார்த்து ஓட்டம் பிடித்த மாடுபிடி வீரர்கள்!

   -MMH

       சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை அருகே மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. 

கொரோனா தொற்று பரவல் காரணமாக அனுமதி தரப்படாத நிலையில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் மஞ்சுவிரட்டு பிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்த பிறகு கோவில்பட்டி வயல் பகுதியில் நூற்றுக்கணக்கான காளைகளை மாட்டின் உரிமையாளர்கள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விட்டனர். 

இதில் ஏராளமான மாடுகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். இந்நிலையில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாடுபிடி வீரர்களும், அங்கு திரண்டிருந்த கிராம மக்களும் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments