வீட்டை பூட்டிவிட்டு மாடியில் அசந்து தூங்கிய தம்பதி- காலையில் காத்திருந்த அதிர்ச்சி!!

    -MMH

சென்னையில் காரில் இருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூர், 37வது தெருவில் வசித்து வருபவர் விவேகானந்தன்(58). இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 12 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு மாடியில் இருவரும் உறங்க சென்றனர். அதிகாலை 6 மணியளவில் எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 35 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயிருந்தது.

காரில் ஒரு சாவியை வீட்டின் உரிமையாளர் வைத்துவிட்டு சென்றதால் அந்த சாவியை எடுத்து திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. இது குறித்து பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை பதிவுகளை பதிவு செய்து அருகில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments