பகல் நேரத்தில் கோவையிலிருந்து வெளியூர் சென்ற பேருந்துகளில் கூட்டம் இல்லை!!

     -MMH
      கோவை: தமிழகம் முழுவதும் தற்போது அதிகரித்து வரும் கோரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இன்று செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை இரவு நேரங்களில் வெளிமாநிலம் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து சேவையும் இயங்க அனுமதி இல்லை. இதனால் கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் சேவை ரத்து செய்யப்பட்டது. 

இன்று  முதல் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு காலை 7 மணி முதல் 11 மணி வரை பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி பஸ் நிலையத்தில் 30 அரசு விரைவு பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப சென்னை, விழுப்புரம், நெல்லை, குட்டம், கன்னியாகுமரி ஆகிய தங்களுக்கும் மாநிலங்களான பெங்களூர் திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் புறப்பட்டுச் சென்றனர். 

இந்த அரசு போக்குவரத்து கழக சார்பில் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதால் இரவு நேர பஸ்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட 140 பஸ்களில் 40 பஸ்களில் சேவை ரத்து செய்யப்பட்டது. 100 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு பயணிகளின் கூட்டத்தை ஏற்ப 6:30 மணி முதல் 12 மணி வரை பஸ்கள் வெளி மாவட்டங்களை இயக்கப்பட்டு பயணிகள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பஸ்ஸில் ஏற அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் அவர்கள் பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பு பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கை கழுவும் திரவம் மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் சமூக இடைவெளி விட்டு பஸ்ஸில் அவர்கள் வைக்கப்பட்டன. ஆனால் கொரோனோ அச்சம் காரணமாக பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டன.

- சீனி,போத்தனூர்.

Comments