அறுந்து கிடந்த மின் ஒயரில் கால்பட்டு சம்பவ இடத்திலேயே இருவர் பலி!!

  -MMH

கோவை மதுக்கரை வழுக்குப்பாறை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான குளத்தில் மீன் பிடிக்க சென்ற இருவர், அறுந்து கிடந்த மின் ஒயரில் கால்பட்டு சம்பவ இடத்திலேயே பலி.


விசாரனையில் வழுக்குப்பாறை கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  ராமராஜ் என்பவரின் தோட்டத்தில் வேலைபார்க்கும் கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த ராசு மற்றும் மீனாட்சிபுரம் பகுதியை மல்லிகா இருவரும் தோட்ட வேலையை முடித்துக்கொண்டு, தோட்டத்தின் அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்கள் முதலில் குளத்தில் இறங்கிய ராசு குளத்தில் அறுந்து கிடந்த மின் ஒயரை கவனிக்காததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். என்ன நடந்தது என்று தெரியாமல் ராசுவை காப்பாற்ற சென்ற மல்லிகாவும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்க்கு வந்த மதுக்கரை போலிசார். சம்பவஇடம் வழுக்குப்பாறை தாண்டி மீனாட்சிபுரம் அருகில் வருவதால் கிணத்துக்கடவு போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தற்பொழுது கிணத்துக்கடவு போலிசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.

- சீனி,போத்தனூர்.

Comments