ரயில்வே ஊழியரின் துணிச்சல்! காப்பாற்றப்பட்ட குழந்தை! வைரலாகும் காணொலி!
ரயில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகிறது. தானேயில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தின் நடைபாதையில் குழந்தையை பிடித்தபடி கண்பார்வையற்ற பெண் ஒருவர் நடந்துகொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய குழந்தை, தவறுதலாக ரயில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் விழுந்தது.
அதே நேரத்தில், புறநகர் ரயில் ஒன்று அந்த நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாயார் பார்வையற்றவர் என்பதால், குழந்தையை மீட்கமுடியாமல் திண்டாடினார். இவ்வேளையில் அங்கு பணியில் இருந்த ரயில்வே ஊழியர் (பாயிண்ட் மேன்) மயூர் ஷெல்கே என்பவர், தனது உயிரைப் பணயம் வைத்து ஓடிச்சென்று, குழந்தையை மீட்டு தண்டவாளத்தின் பக்கவாட்டிலிருந்து நடைபாதையில் ஏற்றிவிட்டு, தானும் தப்பித்துக்கொண்டார். நொடிப் பொழுதில் நடந்தேறிய இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் ஒரு நொடி தாமதமாக யோசித்திருந்தாலும் இரண்டு உயிர்கள் சிதைந்திருக்கும்! அவருக்கு நாளைய வரலாறு புலனாய்வு இதழின் சார்பில் மனப்பூர்வ வாழ்த்துகள்!
-பாரூக்.
Comments