திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பள்ளி மாணவர் பலி!

  -MMH

திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மகன் கோபி (17). அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் சதீஷ் (17). +2 மாணவன். இவர்கள் இருவரும் உள்ளூரில் நடந்த திருமண விழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கோபி பிரேக் போட்டதால், வாகனத்திலிருந்து இருவரும் கீழே விழுந்தனர். காயம் அடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சதீஷ் இறந்துவிட்டார். கோபி காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தினால் கோட்டையிருப்பு கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

- அப்துல் சலாம், திருப்பத்தூர்.

Comments