கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் 104 படுக்கைகள் கொண்ட சிகிச்சை முகாம். சுகாதாரத்துறை அமைச்சர் திறப்பு.!!!

-MMH

      சென்னை சைதாப்பேட்டையை தொடர்ந்து தற்போது கிங் இன்ஸ்டியூட்டில் 104 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால் மக்கள் பலர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப் படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது.

இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் படுக்கை வசதிகளை கொண்ட தற்காலிக மருத்துவமனையும் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையை தொடர்ந்து தற்போது சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் உள்ள கொரோனா மருத்துவமனையில் 104 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்து, முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.

Comments