நாளை பொது முடக்கத்தால் மதுக்கடையில் குவிந்த மதுப் பிரியர்கள்!! நோய் பரவும் அபாயம்..!!
கோவை மாவட்டம். போத்தனூர் சாரதா மில் ரோடு அரசன் தியேட்டர் அருகில் உள்ள மதுக்கடையில் நோய்த்தொற்றை உண்டாக்கும் வகையில் மது பிரியர்கள் அதிர்ச்சிகொரோன தொற்றை கருத்தில் கொண்டு அரசு நாளை முதல் 24 தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இதையொட்டி நாளை முதல் மதுபான கடை விடுமுறை என்பதால் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதற்கு சிறிதும் அச்சமின்றி சமூக இடைவெளி பின்பற்றாமல் மதுவை வாங்கி செல்லும் காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மதுப்பிரியர்கள் மதுவை மட்டும் வாங்கி செல்லவில்லை மதுவோடு கொரோனா எனும் தொற்றையும் வாங்கி செல்கிறார்கள் என்பது கவலைக்குரிய செயல் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜேஷ், ஈசா.
Comments