தமிழகத்தில் வருகின்ற 13ஆம் தேதி வரை வங்கிகளின் நேரத்தை குறைத்து அறிவிப்பு!!

 

-MMH

      தமிழகத்தில் ஊரடங்கைச் சில தளர்வுகளுடன் வருகிற 14ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் வங்கிப் பரிவர்த்தனைகள், ஏற்கனவே அறிவித்தது போல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும் என்றும் வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13ஆம் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் வங்கிக் கிளைகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் வங்கிப் பரிவர்த்தனைகள் ஏற்கனவே அறிவித்தது போல் பகல் 2 மணி வரை மட்டுமே இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம்போல, மாலை 5 மணி வரை செயல்படும். வங்கிகள் அனைத்தும் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை வைத்து செயல்பட வேண்டும் இதனை மாற்றும் முறையில் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கிகள் பண பரிவர்த்தனை, ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு NEFT எனும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம், IMPS எனும் உடனடி கட்டண சேவை மற்றும் RTGS ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் சேவை, நிகழ்நேர மொத்த தொகை செலுத்துதல் போன்ற சேவைகளை வழங்க வேண்டும். அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகளை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் ஏடிஎம், பணம் செலுத்தும் எந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

-சுரேந்தர்.

Comments