செயற்கை மருதாணியால் வரும் ஆபத்து பெண்களே உஷார்..!!

 

-MMH

    பெண்களே செயற்கை மருதாணியை பயன்படுத்துகீறிர்களா  புற்று நோய் வருமாம் பாத்து இருங்க. உடலை பாதிக்கும் இரசாயன பொருட்கள்.  கார்சினோஜீனிக் எனப்படும் வேதிப்பொருட்கள் நேரடியாக உடலுக்கு சென்று மரபனுக்களை தாக்கி, கூந்தலில் கலந்து உச்சந்தலையில் பூசும் போது, முடியின் வேர்களில் இருந்து உடலை ஊடுருவி இரத்ததுடன் கலைக்கலாம்.

புற்று நோய்க்கான நச்சுகள் சிறுநீர் பையில் நிரந்தரமாக தங்கி லிம்போமா என்ற புற்றுநோயை எற்படுத்துகிறது என்று புற்று நோய் நிபுனர்கள் கூறுகின்றனர். கருப்பு சாயங்களில் மற்ற வண்ணங்களை விட அதிகமான புற்றுநோய்க்கான நச்சுகள் உள்ளன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தடை செய்யப்பட்ட பென்சீன். இது மட்டுமல்லாமல் பெண்கள் தலைமுடி,  மற்றும் நிறத்தை தடிமனாக்க செயற்கை மருதாணியை பயன்படுத்துகிறார்கள். மருதாணி கலந்த அந்த கெமிக்கல் பென்சீன் லுகேமியா, ரத்தம் மற்றும் மைலோமாவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அழகுக்காக பச்சை குத்துவதும் ஆபத்தானது என்று புற்றுநோய்யியல் நிபுனர்கள் கூறுகின்றனர். வளர்ந்த நாடுகளில் பென்சீன் கலந்த அழகு சாதன பொருட்கள் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இது உடனடியாக கிடைக்கிறது. 

இவை புற்று நோய்யை மட்டுமல்ல, தோல் நோய் களையும் ஏற்படுத்துகின்றனஎனவே முடிசாயங்களை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்கவும். தேவையில்லை என்றால், தரமற்ற செயற்கை மருதாணியை பயன்படுத்துவையும் தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

நாளைய வரலாறு செய்திகளுக்காக  

-வேல்முருகன் தூத்துக்குடி.ஈசா.

Comments