கோவையிலும் கட்டுப்பாடுகளுடன் கூடி அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு பரிந்துரை செய்யுமாறு ஆட்சியரிடம் கோரிக்கை!!

     -MMH
     பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கு.சண்முகசுந்தரம் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்த தமுமுக, மமக, திமுக நிர்வாகிகள்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, மருத்துவ அணி மாநில துணை செயலாளர் ரபீக், தமுமுக, மமக மாவட்ட துணை செயலாளர் சிராஜ்தீன், SMI சித்திக் ஆகியோர் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கு. சண்முகசுந்தரம் அவர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் உயர்திரு.சமீரன் இ.ஆ.ப. அவர்களை சந்தித்து தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறந்தது போல் கோவையிலும் கட்டுப்பாடுகளுடன் கூடி அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு தலைமைச் செயலர் அவர்களுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

விரைவில் வழிபாட்டுத் தலங்கள் சம்பந்தமாக நல்ல முடிவு வரும் என்று மாவட்ட ஆட்சியர் வாக்குறுதி அளித்தார். உடன் திமுக பகுதி செயலாளர் ஜெயினுலாபுதீன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சாதிக், வார்டு செயலாளர் குத்புதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-ருசி மைதீன்.

Comments