வாளையார் சோதனைச் சாவடியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!!

   -MMH

பாலக்காடு மாவட்டம் வாளையார் ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .கேரளாவில் முக்கிய எல்லைச் சோதனைச்சாவடிகளில் ஒன்று வாளையார். இந்த சோதனைச்சாவடி வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அதிகப்படியான சரக்கு லாரிகள் கேரளாவிற்குள் நுழைகின்றன. வாளையார் ஆர்டிஓ சோதனைச்சாவடியில் அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


உடனடியாக விழித்துக் கொண்ட போலீசார்அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு அதிகாரிகள் மாறுவேடத்தில் கண்காணித்தனர். நேற்று சோதனைச்சாவடியில் அதிரடியாக சோதனை நடத்தி வந்த போலீசார். 24 மணி நேரத்தில் அரசு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்து 250 ரூபாய் ஆகும். ஆனால் வசூல் கட்டணத்திற்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 71 ஆயிரத்து 725 அதிகப்பணம் இருந்தன. அதிகபட்சமாக இருப்புத்தொகை கேட்டபோது சரக்குலாரி டிரைவர்களிடம் லஞ்சமாக பெற்ற பணம் என்று தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இந்த அதிரடி சோதனையில் பாலக்காடு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சம்சுதீன் தலைமையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன், எஸ்ஐக்களான மனோஜ்குமார், முகமது சலீம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-என்.வி.கண்ணபிரான், ஈசா.

Comments