தாய் 2 குழந்தைகளுடன் தற்கொலை!!

   -MMH

    கோவை குப்பனுாரில் உள்ள தனியார் தோட்டத்தில் நேபாளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (24). இவரது மனைவி தன்கலா(22). இவர்களுக்கு மூன்று வயதில் மகள், ஒரு வயதில் மகன் ஆகியோர் தங்கி, அருகில் உள்ள மாட்டு பண்ணையில் வேலை செய்தனர்.

நேற்று காலை பணிக்கு செல்ல மனைவியை ராஜ்குமார் அழைத்துள்ளார். அப்போது, தன்கலா தலை வலிப்பதாக கூறியுள்ளார். பின் பகல், 12:00 மணிக்கு, ராஜ்குமார் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. பின்புறமுள்ள ஜன்னல் கண்ணாடியை, உடைத்து பார்த்தபோது, தன்கலா மற்றும் இரு குழந்தைகள் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். இச்சம்பவம் குறித்து பேரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments