வேகமாகப் பரவும் புதிய 'மிஸ்க்' நோய்! இந்தியாவில் அடுத்த ஆபத்து!

 

-MMH

     கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் கொரோனாவுக்கு அடுத்தப்படியாக மிஸ்க் என்ற நோய் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 4 குழந்தைகள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனாவைத் தொடர்ந்து ஜிகா வைரஸ் பரவ தொடங்கிய நிலையில், தற்போது மிஸ்க் என்ற புதிய நோய் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெரும்பாலும், கொரோனா பாதித்த 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள், குழந்தைகளைத்தான் இது தாக்குகிறது. கேரள சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஒன்றரை வருடத்தில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை இந்த நோய் தாக்கியுள்ளது. அதில் இதுவரை 4 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். மிஸ்க் நோய் பாதித்த குழந்தைகளில் 95% பேர் கொரோனா பாதித்தவர்கள்" என்றார். குழந்தைகளுக்கு இந்த நோய் பரவியதைத் தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரபடுத்த கேரள சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது.

மிஸ்க் நோய்க்கான அறிகுறிகள்:

கொரோனா பாதித்த 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள், குழந்தைகளை 3 முதல் 4 வாரங்களில் மிஸ்க் நோய் பாதிக்கிறது. கடுமையான காய்ச்சல்தான் இந்தநோயின் முக்கிய அறிகுறி. தோலில் சிவந்த நிறத்தில் தடிப்புகள் ஏற்படும். மெட்ராஸ் ஐ வருவது போல் கண்களில் சிவப்பு நிறம், வாய்க்குள் தடித்தல், ரத்த அழுத்தம் குறைவது உள்பட அறிகுறிகள் காணப்படும்.

-ராயல் ஹமீது.

Comments