பொள்ளாச்சியில் வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்..!!

 -MMH

கொரோனா 2-வது அலையின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகா பகுதிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தால் வளாகம் முழுவதும் புதர்மண்டி கிடக்கின்றன.

இதனால் பொள்ளச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் வகுப்பறைகளை சுத்தப்படுத்தி, கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments