மாமியார் மருமகளின் சண்டையை தீர்க்கும் வினோத கோவில்..!!?? வாங்க பார்க்கலாம்!!!

   -MMH

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அட்டுவம்பட்டி என்ற கிராமம் உள்ளது. கொடைக்கானல் மலை கிராமங்களில் முக்கிய இடமாகவும் இருந்து வருகிறது.

இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த மலைகிராமத்தில் மக்களை வியப்படைய செய்யும் வகையில் கோவில் ஒன்று உள்ளது. எத்தனையோ விசித்தரமான கோவில் இருக்கும் மத்தியில் இந்த கோவிலுக்கு அப்படி என்ன சிறப்பு என்றால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

அட்டுவம்பட்டி கிராமத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சென்றால் இந்த வினோத கோயில் இருக்கிறது. அந்த கோவில் தான் மாமியார் மருமகளின் சண்டையை தீர்க்கும் விநோத கோவில்.

அதாவது பல ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டைவிட்டு கோபித்து வந்த மருமகளை சாந்தப்படுத்தி சமாதானப்படுத்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மாமியார் வந்ததாகவும் அப்படியே அவர்கள் கல்லாக மாறி தற்போது கடவுளாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பெரும்பாலும் குடும்ப சண்டையில் இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக இந்த கோயிலுக்கு வந்து சென்றுவிட்டால் மாமியார்- மருமகள் பிரச்சினை குறையும் என்றும், அதுமட்டுமல்லாமல், கோயிலில் சுற்றி வசிக்கும் ஏராளமான மக்களுக்கு இந்த கோவில் ஒரு காவல் தெய்வமாக இருந்து வருகிறது .

பல்வேறு கோவில்களை தமிழகத்தில் நாம் கண்டிருப்போம். ஆனால் இது போன்று மாமியார்-மருமகள் கோவிலை முதன்முறையாக கொடைக்கானல் மலைப்பகுதியில் காண்பது வியப்பாகவே இருக்கிறது. மேலும் இந்த கோயிலில் வருடாந்திர பூஜை ஒருமுறை நடக்கும் எனவும் இந்த பூஜையில் பொங்கல் வைத்து மட்டுமே வழிபடுவர் எனவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த கோவிலுக்கு செல்ல கூடிய சாலை முறையான பராமரிப்பு இன்றி இருப்பதால், ஏராளமானோர் இந்த கோவிலை தேடி வருவதால் உரிய பராமரிப்பு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

-N.V.கண்ணபிரான்.

Comments