கந்து வட்டி மற்றும் மீட்டர் வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை; கோவை மாநகர காவல் துறையினர் அதிரடி!!

 

-MMH

கோவை மாநகர காவல் ஆணையாளர்.

குடும்ப சூழ்நிலை மற்றும் கொரோனாகால ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காகவும், வியாபாரத்தை மேற்கொண்டு நடத்துவதாகவும், பொதுமக்களும் தொழிலாளர்களும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை சீரமைக்க தொழிலதிபர்களும் வட்டிக்கு பணம் கேட்டு கந்து வட்டி கொடுக்கும் நிறுவனங்களையும் நபர்களையும் அணுகி பணம் பெறுகின்றனர்.

சில இடங்களில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் நேரடியாகவே தொழிலாளர்கள், மற்றும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று பணம் கொடுக்கிறார்கள் மேலும் சிறு, குறு தொழில் முனைவோரின் நிறுவனங்களுக்கே சென்று வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வருகின்றனர்.கந்துவட்டிக்காரர்கள் சிலர் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கின்றனர்.

கந்துவட்டி கும்பலை சார்ந்தோர் அலுவலகம் அமைத்து செயல்பட்டால் காவல்துறையினரால் சிக்கிக் கொள்வோம் என்பதால் அலுவலகம் அமைக்காமல் இருசக்கர வாகனங்களில் சென்று பணம் கொடுப்பதும் வசூலிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கடன் பெற்றவர்கள் வட்டியையும், தவனையையும் அடுத்தடுத்து திருப்பி செலுத்த தவறும்போது கந்துவட்டிக்காரர்கள் மனிதாபிமானம் இன்றி கடுமையான வார்த்தைகளால் பேசி பணத்தை வசூலிக்கிறார்கள்.பல நேரங்களில் அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். கந்து வட்டிக்காரர்களின் அடாவடித்தனத்தால் பணம் வாங்கியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி குடும்ப மானத்தை கருத்தில் கொண்டு அவர்களிடம் பேச முடியாமலும், காவல்நிலையத்திற்கு சென்று சொல்லவும் முடியாமல்  மறைத்து துன்பப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.ஒருசிலர் விபரீதமான முடிவுகளை எடுக்கிறார்கள்.

கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு, பணம் கொடுப்பது, வசூலிப்பது, தண்டனைக்குரிய குற்றமாகும். மேற்படி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . எனவே கந்து வட்டி, மீட்டர் வட்டி , பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முறையாக காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். அல்லது நேரில் வர இயலாதவர்கள்,குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியே செல்ல தயங்குபவர்கள் மேற்படி கந்துவட்டிக்காரர்கள் பற்றிய விபரங்களை அறிந்தவர்கள் அதுகுறித்த தகவல்களை கோவை மாநகர காவல் துறையின் அலைபேசி எண் 9498181213 எண்ணிற்கு தொலைபேசி மூலமாகவும் மற்றும் 

8190000100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு ,பணம் கொடுப்பவர்கள் பற்றின தகவல்களை தருபவர்கள் பற்றிய விபரங்களை ரகசியமாக பாதுகாக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments