குட்டி பாம்பை பிடித்து இடையூறு செய்யும் விடியோ காட்சிகள், வனத்துறையினர் விசாரணை !!

 

-MMH

       கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் புகைபடம் எடுப்பதற்காக குட்டி பாம்பை பிடித்து புகைபடம் எடுத்து இளைஞர்கள் சிலர் இடையூறு செய்யும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்லான நிலையில், புகைபடம் எடுத்து இடையூறு செய்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் நேற்று பறவைகள் மற்றும் அங்கு இருக்கக்கூடிய சிறு , சிறு பூச்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு குட்டி பாம்பை புகைப்படம் எடுப்பதற்காக வாலைப் பிடித்து இழுத்து இடையூறு செய்துள்ளனர்.

தொடர்ந்து பாம்பை தூக்கி வெவ்வேறு இடத்திற்கும் எடுத்துச் சென்று வைத்து புகைப்படத்தை எடுத்துள்ளனர். இதை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ காட்சியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் குட்டி பாம்புக்கு இடையூறு செய்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புகைப்படம் எடுத்த நபர்களில் ஒரு சிலர் வனத்துறையினருக்கு தெரிந்த நபர்கள் என்பதால் அவர்களை விசாரணைக்கு வரும்படி வனத்துறையினர் அழைத்துள்ளனர். குளங்களில் பறவைகள், ஊர்வனவற்றிக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

-சுரேந்தர்.

Comments