துளிர் சமூக வழிகாட்டி & சேவை மையம் சார்பாக மாற்றுத்திறனாளி களுக்கான உதவி !!
துளிர் சமூக வழிகாட்டி & சேவை மையம் சார்பாக மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கிட தேர்வு செய்வதற்கு மதிப்பீடு முகாம் 08.9.2021 புதன்கிழமை காலை 10.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பல்வேறு ஊர்களின் மாற்று திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் பெற பதிவும், மதிப்பீடும் செய் யப்பட்டனர்.
துளிர் சமூக வழிகாட்டி & சேவை மையம் செயற்பட்டளர் Z. சித்தி ரம்ஜான் மற்றும் நிறுவனர் வக்கீல் அஹமத் மற்றும் துளிரின் தொண்டு பணியாளர்கள் முகாம் பணிகளில் தன்னார்வளர்களாக செயல்பட்டனர்.
நாளைய வரலாறு, நெல்லை செய்தியாளர்.
-அன்சாரி.
Comments