கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்!!

  -MMH

    கோவை மாவட்டத்தில் 1475 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது இதற்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலரும் காதி மற்றும் கதர் கிராம வாரிய தலைமை செயல் அலுவலர் சங்கர் நேற்று கோவை வந்தார் பின்னர் அவர் தடுப்பூசி முகாம் ஏற்பாடு குறித்து கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கன்கரா,மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்பட அனைத்து துறை அலுவலர்களுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார் இதையடுத்து கண்காணிப்பு அலுவலர் சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது;

கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 1167 இடங்களிலும் மாநகராட்சி பகுதிகளில் 308 இடங்களிலும் என மொத்தம் 1475 இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது ஒரு முகாமில் தடுப்பூசி செலுத்துபவர், கணினி பதிவாளர், இரண்டு உதவியாளர்கள் என 4 பேர் வீதம் 5900 நபர்கள் பணியாற்ற உள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் முதியவர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் முப்பத்தி எட்டு லட்சத்து 67 ஆயிரத்து 926 ஆகும்.இதில் இருபத்தி ஏழு லட்சத்து 7 ஆயிரத்து 550 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதுவரை 22 லட்சத்து 3 ஆயிரத்து 34 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும் 5 லட்சத்து 75 ஆயிரத்து 837 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி என மொத்தம் 27 லட்சத்து 78 ஆயிரத்து எண்ணூற்று எழுபத்து ஒரு  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது .

இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 லட்சத்து 5 ஆயிரத்து 516பேர்   தற்போது இரண்டாவது தவணை கோவிஷீல்டுக்கு காத்திருப்பவர்கள் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 785 பேர் ,கோவேக்ஸின்  தடுப்பூசிக்கு நாற்பத்தி ஆறு ஆயிரத்தி 196 என ஒரு லட்சத்து 91 ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஒரு  பேர் உள்ளனர். இன்று நடைபெறும் பிரம்மாண்ட முகாம் மூலம் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம் என்று கூறினார்.

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்

Comments