மகன் கையால் தாலி வாங்கி மறுமணம் புரிந்த கல்லூரி பேராசிரியை!!!

 -MMH

மகன் கையால் தாலி வாங்கி மறுமணம் செய்து கொண்ட கல்லூரி பேராசிரியை. மதுரை அருகே நடந்த புதுமை திருமணம் கல்லூரி பேராசிரியை ஒருவர் தன்னுடைய எட்டு வயது மகனின் கையால் தாலியை பெற்று புதிய மணமகனை மறுமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் மதுரை அருகே வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் சுபாஷினி ராஜேந்திரன், ஆங்கிலத் துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமான நிலையில் மணவிலக்கு பெற்று சட்டப்படி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு 9 வயதில் தர்ஷன் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றி வரும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஓவியர் ஆதிஸ் என்பவரை திருமணம் செய்ய முடிவெடுத்த சுபாஷினி ராஜேந்திரன், நேற்று திருமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயிலில் வைத்து குடும்பத்தினர் முன்னிலையில் தனது மகன் தர்ஷன் தாலியை எடுத்து மணமகன் ஆதிஸிடம் கொடுக்க அதை மணமகள் சுபாஷினியின் கழுத்தில் கட்டி திருமணம் செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து நண்பர்களை தங்களது உறவினர்களாக ஏற்றுக் கொண்டு மாலை மற்றும் மெட்டி அணிவித்து பெரியார் படத்தின் முன்பாக மாலை மாற்றிக் கொண்டனர். இத்திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-N.V.கண்ணபிரான்.

Comments